ஸூரத்துல் ஃபஜ்ரி(விடியற்காலை)
மக்கீ, வசனங்கள்: 30
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
மக்கீ, வசனங்கள்: 30
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
89:1 وَالْفَجْرِ
89:1. விடியற் காலையின் மீது சத்தியமாக,
89:2 وَلَيَالٍ عَشْرٍ
89:2. பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
89:3 وَالشَّفْعِ وَالْوَتْرِ
89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
89:4 وَاللَّيْلِ إِذَا يَسْرِ
89:4. செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
89:5 هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ
89:5. இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
89:6 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
89:6. உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
89:7 إِرَمَ ذَاتِ الْعِمَادِ
89:7. (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,
89:8 الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ
89:8. அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
89:9 وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ
89:9. பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
89:10 وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ
89:10. மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
89:11 الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ
89:11. அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
89:12 فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ
89:12. அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
89:13 فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
89:13. எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
89:14 إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ
89:14. நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்.
89:15 فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ
89:15. ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.
89:16 وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
89:16. எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.
89:17 كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَ
89:17. அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
89:18 وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
89:18. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
89:19 وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّا
89:19. இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
89:20 وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
89:20. இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
89:21 كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
89:21. அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
89:22 وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا
89:22. உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
89:23 وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ
89:23. அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
89:24 يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي
89:24. “என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.
89:25 فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ
89:25. ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
89:26 وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ
89:26. மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
89:27 يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ
89:27. (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
89:28 ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
89:28. நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
89:29 فَادْخُلِي فِي عِبَادِي
89:29. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
89:30 وَادْخُلِي جَنَّتِي
89:30. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக