வியாழன், 20 செப்டம்பர், 2012

சர்வ சக்திமிக்கவனுக்காக



சிதைந்து சீரழிகின்ற என் 
சமூகத்தின் சிதிலங்களை 

சிந்தித்து  சிந்தித்து 
சிதைந்து கொண்டே இருக்கிறேன்

சிந்தனையில் உதித்ததை 
சீர்தூக்க எண்ணி செய்துபார்க்க 

செம்மையாய் வரும்போதெல்லாம் 
சதியால் சிதைக்கபடுகிறேன்

சரி 

சிதைந்த  என் சிறகுகள் 
சீர்செய்த பிறகு  வருவேன் 

சிலகாலம் கழித்து மீண்டும் 
சமூகத்தை செம்மை படுத்த......

3 கருத்துகள்:

  1. /சிந்தனையில் உதித்ததை
    சீர்தூக்க எண்ணி செய்துபார்க்க

    செம்மையாய் வரும்போதெல்லாம்
    சதியால் சிதைக்கபடுகிறேன்///

    என் எண்ணங்களை பிரதிபலிப்பது போல் உள்ளது அண்ணே.!!

    //சிதைந்த என் சிறகுகள்
    சீர்செய்த பிறகு வருவேன்

    சிலகாலம் கழித்து மீண்டும்
    சமூகத்தை செம்மை படுத்த.....// இன்ஷா அல்லாஹ்..!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் அழ்மணத்தில் இருந்து வருவாது போல் உணருகிறேன். ஜெஸக்கல்லாஹ் ஹைர். சகோ.

    பதிலளிநீக்கு
  3. சிறகுகள் தானாய் சிதைவதில்லை
    சிதைக்கத்தான் படுகிறது
    ஆகையால்
    சிறகை சரிபடுதிக்கொண்டே
    சிறிதும் சிந்திக்காமல்
    சீர்தூக்கிபார்ப்பதையும்
    செம்மைப்படுத்துவதையும்
    செயல்படுத்திக்கொண்டேயிருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு