சிதைந்து சீரழிகின்ற என்
சமூகத்தின் சிதிலங்களை
சிந்தித்து சிந்தித்து
சிதைந்து கொண்டே இருக்கிறேன்
சிந்தனையில் உதித்ததை
சீர்தூக்க எண்ணி செய்துபார்க்க
செம்மையாய் வரும்போதெல்லாம்
சதியால் சிதைக்கபடுகிறேன்
சரி
சிதைந்த என் சிறகுகள்
சீர்செய்த பிறகு வருவேன்
சிலகாலம் கழித்து மீண்டும்
சமூகத்தை செம்மை படுத்த......
/சிந்தனையில் உதித்ததை
பதிலளிநீக்குசீர்தூக்க எண்ணி செய்துபார்க்க
செம்மையாய் வரும்போதெல்லாம்
சதியால் சிதைக்கபடுகிறேன்///
என் எண்ணங்களை பிரதிபலிப்பது போல் உள்ளது அண்ணே.!!
//சிதைந்த என் சிறகுகள்
சீர்செய்த பிறகு வருவேன்
சிலகாலம் கழித்து மீண்டும்
சமூகத்தை செம்மை படுத்த.....// இன்ஷா அல்லாஹ்..!
உங்கள் அழ்மணத்தில் இருந்து வருவாது போல் உணருகிறேன். ஜெஸக்கல்லாஹ் ஹைர். சகோ.
பதிலளிநீக்குசிறகுகள் தானாய் சிதைவதில்லை
பதிலளிநீக்குசிதைக்கத்தான் படுகிறது
ஆகையால்
சிறகை சரிபடுதிக்கொண்டே
சிறிதும் சிந்திக்காமல்
சீர்தூக்கிபார்ப்பதையும்
செம்மைப்படுத்துவதையும்
செயல்படுத்திக்கொண்டேயிருக்கவேண்டும்.