உலகில் வழக்கத்தில் உள்ள ஒரு முறை.
ஆனால் மனிதஉரிமை கமிசன் எதிர்க்கும் முறை.
அது விசாரனை கைதியை விசாரிக்க அவரை தொடர்ந்து
தூங்கவிடாமல் செய்து,ஒரு நிலையில் அவர் தன்
சுய கட்டுப்பாடு இழக்கும் போது உண்மையை கேட்பது.
அப்போது உளவியல் ரீதியாக அவர் மிகவும் பாதிக்கப்படிருப்பார்.
என்பதால் மனிதஉரிமை கமிசன் எதிர்க்கிறது.
நார்கோ சோதனை என்று சொல்கிறார்களே
அரை தூக்க விசாரனை அதுபோல்.
ஏற்கனவே டாஸ்மாக் போதைக்கு அடிமையானது மூலம்
மக்களின் சிந்தனை திறன் பாதிக்கப்படுவதாக
சமூக ஆர்வலர்கள் கூறிவரும் இந்த நேரத்தில்,
அதேபோல முக்கால் மணிநேரம் மின்சாரம்
முக்கால் மணிநேரம் மின்தடை மூலம்
தொடர் தூக்கத்திற்கு பெரும் தடையாக மாற்றி
மக்களை உளவியல் ரீதியாக பாதிப்படயவைத்து
எதை சாதிக்க போகிறது மின்சார வாரியம்? !
தமிழகம் எனும் மாநிலம் திறந்தவெளி விசாரணை கூடமோ?
எதை நோக்கி ? எதற்காக? ஏன் ?
என் மக்களின் முன்னேற்றத்தின் மீது
தீராத ஆவல்கொண்ட
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்
அதே போல் தான் இருக்கு சகோ...
பதிலளிநீக்குநைட் ஒரு மணி நேரத்திற்கொரு முறை ஒரு மணி நேரம் என மின் தடை... சுத்தமா தூக்கமே இல்லை :(
//தமிழகம் எனும் மாநிலம் திறந்தவெளி விசாரணை கூடமோ?//
பதிலளிநீக்குஇதில் சந்தேகம் வேறையா???
ஆமா கூடங்குளம் பிரச்சனை வரும்போது மின்வெட்டும் அதிகமாகிறதே அந்த கோணத்தில் யோசித்துப் பாருங்கள்
//அதேபோல முக்கால் மணிநேரம் மின்சாரம்
பதிலளிநீக்குமுக்கால் மணிநேரம் மின்தடை மூலம்
தொடர் தூக்கத்திற்கு பெரும் தடையாக மாற்றி
மக்களை உளவியல் ரீதியாக பாதிப்படயவைத்து
எதை சாதிக்க போகிறது மின்சார வாரியம்? !//
ம்ம்.... யோசிக்க வேண்டிய யூகம்தான்... இன்ஷா அல்லாஹ்.... தேடுகிறேன் இதற்கான பதிலை.