செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இடிந்தகரைக்கு இயக்கம் கொடுங்கள்

இடிந்தகரையில் உள்ள இரும்பு மக்களே.......


உங்களின் உறுதி மட்டும் தான் இரும்பு 
நீங்கள் நாளைய மக்களின் நலனுக்கு போராடுவதால் 
நீங்கள் இரக்கம் மிக்கவர்கள் என்று உரக்க கூறுகிறேன்.


உங்களோடு இந்த பாவப்பட்ட சாமானியன் 
போராட்டத்தில் பங்குபெறமுடியவில்லையே 
என்று ஏக்கம் கொள்கிறேன்.

தேசத்தின் புதிய சுதந்திரத்தின் போர்குரல்
காந்திய வழியில் மீண்டும் தொடங்கப்பட்டது
என்பதை தான் தாங்கள் அறிவிக்கிறீர்கள்.

உண்மை முதலில் தோற்கத்தான் செய்யும் தோழர்களே..!
முன்னூறு வீரர்களின் நிஜத்தில் உள்ளது போல்
தாங்களின் வெற்றி முதலில் தாமதிக்கப்பட்டாலும்
தமிழகம் இனி தங்களுக்கே தான்.........

ஓ என் முஸ்லீம் சமூக இயக்கங்களே......
ஓ என் தலித் சமூக இயக்கங்களே.....
ஓ என் திராவிட சமூக இயக்கங்களே.....
ஓ என் கிருஸ்துவ சமூக இயக்கங்களே.....

அனைத்தையும் கடந்து
இடிந்தகரைக்கு இயக்கம் கொடுங்கள்.

வேண்டாம் நமக்கு
அணு ஆயுதம்.....
அணு உலை.....

மக்களுக்கு கல்விகொடுப்போம்
மக்களுக்கு தொழில் பயிற்சி கொடுப்போம்

ஹிரோஷிமா நாகசாகிக்கு பிறகு
ஜப்பானிய மக்கள் எடுத்த முடிவை - நாம்
கல்பாக்கத்திற்கும் கூடங்குளத்திற்கும் முன்னே எடுப்போம்.....

உலகத்திற்கு மிகவும் இலகுவான சூரிய ஒளி மின்சாரத்தை
நம் தேசத்தின் மக்களின் தயாரிப்பின் மூலம் உலகுக்கு விற்போம்.....

அன்பு கொள்வோம்
அகமகிழ்வோம்
அகிலத்தை ஆக்குவோம்.......

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

4 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. ungal payanathai thodakkunkal anna neengal kooriya muslim samooga iyakkankal sdpi popular front tmmk ellam kalathil eni kristhvarkal viduthalai sirutahayum kalathil irankuvarkal

    பதிலளிநீக்கு