கல்வியின் நோக்கம் என்ன வென்பதை பற்றி
நாம் நிச்சமற்றவராக இருக்கக்கூடாது.மற்றொருவன் அடைந்திருக்கும் பயிற்சியைப்
பாராட்டவோ அல்லது குறைகூறவோ செய்கிறபோது,
நாம் நம்மை படித்தவர்களென்று கருதிக்கொள்கிறோம்.
மற்றவனை ஏதோ ஒரு விஷயத்தில்,
உதாரணமாக வியாபார விஷயத்தில் அல்லது
கப்பல் தொழிலில் படிப்பில்லாதவன்,அதாவது அந்தத்துறையில் பயிற்சி
இல்லாதவனென்று சொல்கிறோம்.
நாம் கூறுகிற கல்வியின் நோக்கம் இதுவன்று.
சிறு வயதிலிருந்து ஒருவனை
ஒழுக்கத்தில் பயிலுவிப்பது எதுவோ,
எது அவனை ஒழுங்குள்ள பிரஜையாக
இருக்கவேண்டுமென்று ஆவலுடையவனாகச் செய்கிறதோ,
எது அந்தப்பிரஜைக்கு நீதி முறையாக ஆள்வதற்கும்
ஆளப்படுவதற்க்கும் தெரியப் பண்ணுகிறதோ,
அதைத்தான் கல்வி யென்று நாம் சொல்கிறோம்.
மற்றபடி பணம் சம்பாதிப்பதையோ,
தேகபலத்தை விருத்தி செய்து கொள்வதையோ,வேறு துறைகளில் பயிற்சி பெறுவதையோ
நோக்கமாகக் கொண்ட எந்தக் கல்வி முறையும்
சிந்தனையற்ற யந்திரந்தான்;
மன விரிவற்றதுதான்.
இதனைக் கல்வியென்று
பெயரிட்டே அழைக்கக் கூடாது.
- பிளேட்டோ
:- இன்று நான் படித்ததில் எனக்கு பிடித்தது ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக