ஞாயிறு, 20 மே, 2012

அன்பிற்குரிய திராவிடர்களே,

அன்பிற்குரிய திராவிடர்களே,

வர்ணாஸ்ரம பல்கலைக்கழகத்தில் 
பட்டம் பெறாத எனதருமை திராவிடர்களே,

மேதகு அம்பேத்கார் கூறியதை 
இங்கு நினவுப்படுத்துகிறேன்.

அது 

கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்

அண்ணல் அம்பேத்கார் அவர்கள் கூறிய
இந்த வரிசையை கூர்ந்து கவனியுங்கள்.

முதலில் கற்பி அடுத்து ஒன்று சேர்
பிறகு புரட்சி செய் எனும் வரிசை.

இந்த வரிசைப்பிரகாரமே நாம் பயணிக்கவேண்டும்.

ஆனால் கற்பியை விட்டு விட்டு
ஒன்று சேர்வதும் புரட்சி செய்வதுமான
நிகழ்வுகள் எல்லாம் காலசக்கரத்தில்
சிக்குண்டு சிதறிவிடும் என்பது
கடந்தகால நிகழ்வுகள்கள் மூலம்
நாம் அறியும் அனுபவப்பாடம்.

எனவே ஒன்று கூடும் திராவிடர்களே,

முதலில் கற்றுக்கொள்ளுங்கள், கற்பியுங்கள்.

அண்ணல் அம்பேத்கார் அவர்களின்
அனுபவம் மிகச்சரியானது.

அதில் இருந்து பாடங்கள் படிப்போம்

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக