திங்கள், 5 டிசம்பர், 2011

தாயே எனை தாலாட்டு

பிறந்தது ஏனோ ஏழையாய்
ஈன்றேடுத்தவள் ஏனோ ஈகை மனதுடன்
அவளோடு பிறந்தவளிடம் ஈன்றுவிட்டாள்

வழந்து வந்தேன்

வாழ்க்கைப்பட கூறினால் செவிலித்தாய்
எனக்கு அகவை பதினைந்து
மணாளனுக்கு நாற்பது
ஆனாலும்
மணாளன் எனை மாளிகையில் வைத்தார்
ஈன்றெடுத்தேன் என்ம்கன்களை
வாழ்த்தும் வந்தேன் வசதியாய்

இரக்க மனம் கொண்ட மணாளன்
ஏனோ என்நிலை கண்டு   ஏங்கியே  மாண்டுபோனார் 
எனக்கு அச்சமயம் அகவை முப்பது

தகப்பன் குணம்  கொண்ட என் மகன் கூறினார்
கூறாததை மறுத்துவிட்டேன்

வாழ்கிறேன் வசதியாய் மாளிகையில்
மகன்களோடு மகிழ்ச்சியாய்

தற்போது வயது எனக்கு அய்ம்பது

மாண்டுபோனார் ஈன்ற தாய்
மருத்துபோனார் செவிலித்தாய்

தனிமையில் நான்
தாயே எனை தாலாட்டு

1 கருத்து: