ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

ஏற்றுக்கொண்டேன் உன்னை முழுமனதுடன்

வேசி என்கின்றனர்
உன்னை
வேடம் அணிந்த
வேடர்கள்

வேஷம் போடா வேண்டாம்
என்று வேரோடு
வெருத்துதானே
என்னை விரும்பி வந்தாய்

படைத்தவன் உனக்கு
கொடுத்த அழகு
உன் குற்றமா

பெற்றவளும் உன்மூலம்
பெற்றுக்கொள்கிறாள்

கரம் பிடித்தவனும்
உன்னை வைத்து குடும்பத்தில்
கள்ளத்தனம் செய்கிறான்

கரம் வேண்டும்
காப்பாற்ற என்று
கரம்வேண்டி நிற்கதியாய்
நீ நின்ற போதும்
உன் கற்பு வேண்டியே
கனவான்கள் காத்திருந்தார்கள்

விரும்பி இருந்தால்
நிரந்தரமாய் நெருப்பில்
நின்றுதானே நீ இருந்திருப்பாய்

வேண்டாம் இந்த வேஷம்
என்றுதானே
திண்ணமாய் நீ துணிந்து நின்றாய்

படைத்தவனே உனக்கு
பாதை தந்தான்
பயணித்து
பல மைல் நீ கடந்துவருகிறாய்

ஆனானும்
வேடம் அணிந்த வேடர்கள்
உன்னை வேசி என்கின்றனர்

கவலைப்படாதே
கண்ணின் இமை போல்
உன்னை காத்திருப்பேன்
கடைசிவரைக்கும்

வேடர்கள் வீசட்டும்
வில்லில் இருந்து அம்மை
கேடயமாய் நான்
கடைசிவரைக்கும்.........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக