வெள்ளி, 3 டிசம்பர், 2010

நாம் சமுத்திரத்தில் மீன் பிடிப்போம்

பேஸ் புக்கில் என் தம்பி திரு.நியாஸ் அவர்களுக்கு
நான் அனுப்பிய கருத்துரை.



அன்பிற்குரிய தம்பி,

திரு.ஜ.சபீக் அவர்களுக்கு தாங்கள் அனுப்பிய கருத்து குறித்த
என்னுடைய விளக்கம்.

"சமூகம் எனும் சமுத்திரத்தில் நாம் சாப்பிடும் மீனும் இருக்கிறது
அதுபோல் நம்மை சாப்பிடும் மீனும் இருக்கிறது.

எப்படி நாம் நம்மை சாப்பிடும் மீனிடம் இருந்து பாதுகாப்போடு
நாம் சாப்பிடும் மீனை பிடிக்கிறோமோ,

அதுவும் சுவைக்க வேண்டி மீண்டும் மீண்டும்
முயற்சிக்கிறோமோ அதுபோல்

சமூகம் எனும் சமுத்திரத்தில் இருந்து நாமும்
பாதுகாப்போடு முயற்சிக்கவேண்டும்.

இதில் எனக்கு மீன் வேண்டாம் என
விதண்டாவாதம் பண்ண முடியாது,

ஏனெனில் சமுத்திரம்  என்பது நம்முடைய
வாழ்வும் அடங்கிய ஒரு பெருவெளி.

அதில் மீன் பிடித்தே ஆகவேண்டும்
இல்லையெனில் நாம் உயிர் வாழ முடியாது.

நாம் வெறுமனே மீனும் பிடிக்காமல்
பாதுகாப்போடும் இல்லாமல் இருந்தால்

நம்மை சாப்பிடும் மீன் அதன் வேலையை
சரியே செய்துவிடும்.

எனவே பாதுகாப்போடு கூட்டு சேர்ந்து
நாம் சமுத்திரத்தில் மீன் பிடிப்போம்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

1 கருத்து:

  1. சமுத்திரத்தில் நாம் சாப்பிடும் மீன்கள் பலதரப்பட்டவை. அவற்றில் எந்த மீனை நாம் சாப்பிட வேண்டும். எந்த மீன் நம்மை சாப்பிட அனுமதிக்கக் கூடாது? ஆனால், நம் சமூகம் சமுத்திரத்தில் மீன் பிடிப்பதற்கு பதிலாக குழம்பிய குட்டையில்தானே பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்....?

    பதிலளிநீக்கு